Thursday, February 2, 2012

ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பின் தனித்தேர்வு முடிவு வெளியீடு- 02 Feb 2012

சென்னை: ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த தனித்தேர்வர்கள், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளை எழுதியவர்கள்.
தேர்வு முடிவை, தேர்வெழுதிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று, தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அறிந்துகொள்ளலாம்.
கருத்தியல் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றும், தேர்வு முடிவுகளில் பட்டயம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலை சான்றிதழ்களுடன், வரும் 4ம் தேதிக்குள், அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி -யில் விரைவில் குறைதீர்ப்பு மையம்: நடராஜ்-29-01-2012

சென்னை: தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12934&cat=1

1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல்-31-01-2012

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

More info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12948&cat=1

இது ஒரு அபத்தமான கல்விமுறை: கல்வி திட்ட அதிகாரி-02-02-2012

சேலம்: இதுவரைக்கும், நம் கல்விமுறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை.
பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது.
இதில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது.
மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம்.
ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.
இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பணபலம் மிக்கவர்களாக தொழிலதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி,படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம்.
மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் அபிஷியலாகவே முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.